இலங்கை

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

Published

on

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் சென்னை (Chennai) இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services (Sri Lanka) Ltd) (AASL) இன்டிகோ (Indigo) விமான சேவையுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன்படி, இண்டிகோ ஜுன் 1, 2024 முதல் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே தினசரி விமானச் செயல்பாடுகளுடன் நேரடி விமானச் சேவையைத் தொடங்கும்.

இந்த இணைப்பு வட மாகாணத்தில் பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மத பிணைப்புகளை வலுப்படுத்தும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (AASL) தலைவர் அதுல கல்கெட்டிய (Athula Galketiya,) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – மும்பைக்கான நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் நேற்று (12) ஆரம்பித்திருந்தது.

இதன்படி செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் விமான சேவைகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version