இலங்கை

இலங்கை – சீன உறவுகளை சீர்குலைக்க முயற்சி

Published

on

இலங்கை – சீன உறவுகளை சீர்குலைக்க முயற்சி

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜதந்திர வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய நாடொன்றின் புலனாய்வுப் பிரிவு சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் சலுகை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ள நிலையில் இவ்வாறு இரு தரப்பு உறவுகளை குழப்புதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இலங்கையின் பௌத்த பிக்குகள் சிலர் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பினைத் தொடர்ந்து தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வதனை சீனா தடுப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version