இலங்கை

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

Published

on

தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்கிறார் பிள்ளையான்!

என்னைப் பொறுத்த வரையில் அதிபர் தேர்தல்தான் முதலில் நடைபெறும் என பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று (09.04.2024) மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கைளயில், சில நேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம்.

நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்.

இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த அதிபர் தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் எவ்வாறான நிலைமைகள் வரும்போதும் நாம் அதனைச் சந்திக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மயிலத்தமடு மாதவனை விவகாரங்களில் பிள்ளையான் பாராமுகமாக செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version