அரசியல்

இலங்கையை திவாலாக்கியது ராஜபக்ச குடும்பமே: சந்திரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

Published

on

இலங்கையை திவாலாக்கியது ராஜபக்ச குடும்பமே: சந்திரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து திருடாமல் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

ராஜபக்ச குடும்பம் நாட்டை திவாலாக்கியது என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு பின்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை சீரழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

Exit mobile version