இலங்கை

இலங்கையில் பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற தந்தை

Published

on

பொலநறுவையில் (Polonnaruwa) தந்தை கத்தியால் குத்தியதில் மகள் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிகுரகொட (Hingurakgoda), ஜயந்திபுர உதனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான யுவதியும் 18 வயதான இளைஞனும் காயமடைந்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். மகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் தங்க பென்டனை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை பிள்ளைகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர்கள் தந்தையுடன் வீட்டில் தங்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version