இலங்கை

நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Published

on

நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று(31.03.2024) நடைபெறவுள்ள உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளை கருத்திற்கொண்டே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version