இலங்கை
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க (Rohana Dissanayaka) தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வயது வரம்பை திருத்தியமைக்க வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.