இலங்கை

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

Published

on

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கிய விடுதிகள்: 137 பெண்கள் கைது

நீர்கொழும்பில் சட்டவிரோத விடுதிகளாக செயற்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த விடுதிகள் சிக்கியுள்ளன.

சட்டவிரோத விடுதிகளாக இயங்கி வரும் மசாஜ் நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களைக் கண்டறிந்த பொலிஸார் அந்த நிலையங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 8 ஆண்கள் மற்றும் 137 பெண்கள் உட்பட மொத்தம் 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்னர்,

இந்நிலையில் இரண்டு பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Exit mobile version