இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு திங்கள் முதல் வரும் திட்டம்

Published

on

பாடசாலை மாணவர்களுக்கு திங்கள் முதல் வரும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்வாறு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version