இலங்கை

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

Published

on

கனடாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் இன்று (20.03.2024) மாலை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இரண்டாவது சந்திப்பானது, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அவர் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version