இலங்கை

வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்!

Published

on

வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்!

விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த தீர்மானம் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே எட்டப்பட்டுள்ளது.

 

Exit mobile version