இலங்கை

மாணவியுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர்

Published

on

மாணவியுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர்

பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஒருவரே அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

14 வயது பாடசாலை மாணவியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version