இலங்கை

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

Published

on

விமானப்படையில் யாழ் இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டுமென சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் சிறிலங்கா விமானப்படையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிறிலங்கா விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சி நிகழ்வுக்கு யாழ் மக்களால் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றைய தினம் மாத்திரம் இந்த கண்காட்சிக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயம். இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் சிறிலங்கா விமானப்படையில் இணைய வேண்டும். ” என தெரிவித்தார்.

Exit mobile version