இலங்கை

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

Published

on

யாழில் விமானப் படை கண்காட்சிக்கு சென்ற பெண் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை, பிரதான நுழைவாயிலில் சோதனையிட்ட போதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண் என தெரியவந்துள்ளது .

இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version