இலங்கை

நெல் கொள்வனவு தொடர்பாக அரசாங்கம் முடிவு!

Published

on

நெல் கொள்வனவு தொடர்பாக அரசாங்கம் முடிவு!

இலங்கை அரசாங்கம் நாட்டில் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்திடம் இருந்து இதுவரை உதவிகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் எதிர்வரும் வாரத்திலேனும் தமக்கான உதவிகள் கிடைக்கப்பெறுமென நம்புவதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பாக கூறியுள்ளார்.

அந்த உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அமைச்சின் நிதியினூடாக நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version