இலங்கை

திருகோணமலை அடர்ந்த காட்டிற்குள் சிவன் கோவில்: செந்தில் தொண்டமான் விஜயம்

Published

on

திருகோணமலை அடர்ந்த காட்டிற்குள் சிவன் கோவில்: செந்தில் தொண்டமான் விஜயம்

திருகோணமலை மாவட்டத்தில் செம்பிமலைப்பகுதிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

செம்பிமலை மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விஜயத்தினை கடந்த 07 ஆம் திகதி கிழக்கு ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில், மகா சிவராத்திரி வழிபாடுகளை நடத்த தேவையான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருகோணமலையில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட செம்பிமலையில் சிவன் ஆலயத்திற்கும் பௌத்த விகாரைக்கும் செந்தில் தொண்டமான் விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த விவகாரம் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, வவுனியாவில் வெடுக்குநாறி மலையில் பௌத்த மக்களினால் இனமுறுகல் தொடருகின்றமை வெறுக்கத்தக்க செயற்பாடாக மாறியுள்ளது.

Exit mobile version