இலங்கை

இலங்கை கடற்பரப்பில் கைதான 22 இந்திய கடற்றொழிலாளர்கள்

Published

on

இலங்கை கடற்பரப்பில் கைதான 22 இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே நேற்று இரவு (09) இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version