இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு

Published

on

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மோசடி செய்து அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை காட்டுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version