இலங்கை

யாழில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

Published

on

யாழில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கான நிகழ்வானது, நாளை (10.03.2024) மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது.

இவ்வாறு, விடுவிக்கப்படும் நிலங்களில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன.

மேலும், அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version