இலங்கை

வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை

Published

on

வெடுக்குநாறி மலைக்கு நள்ளிரவில் வழிபாட்டிற்குச் சென்ற வேலன் சுவாமிகள் கோரிக்கை

வெடுக்குநாறி ஆலய விவகாரமானது வலுப்பெற்று வரும் நிலையில், பாரிய போராட்டம் ஒன்றை நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் இன்றைய தினம்(08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்தே இவர் இதனை கூறியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும் , பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

Exit mobile version