இலங்கை

கெஹலியவிற்கு எதிரான அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பில் அறிவிப்பு

Published

on

கெஹலியவிற்கு எதிரான அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பில் அறிவிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த அறிப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த வெளியிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணப் பட்டியல் செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு முரணாக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,984 ரூபா 45 சதம் நிதி, தொலைபேசி கட்டணமாக செலுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version