இலங்கை

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம்

Published

on

முல்லைத்தீவில் தந்தையால் 11 வயது மகளுக்கு துயரம்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை நேற்றிரவு (06.03.2024) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான நபரொருவரே தனது 11 வயது மகளை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூலித் தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை தவறதான செயற்பாட்டிற்கு உட்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06) சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version