இலங்கை

63 வருடங்களின் பின் இலங்கையில் கால்பதிக்கும் நிறுவனம்

Published

on

63 வருடங்களின் பின் இலங்கையில் கால்பதிக்கும் நிறுவனம்

63 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளது.

அந்தவகையில் ‘ஷெல்’ (Shell) நிறுவனம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான அரசாங்கம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டது.

ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் எரிசக்தி மற்றும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version