இலங்கை

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Published

on

அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை அவசரமாக நடத்த உள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த அவசரக் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மத்தியில் அண்மைய நாட்களாகவே முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version