இலங்கை

தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு

Published

on

தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு

தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) இரவு எல்லை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version