இலங்கை
மத்திய வங்கி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள நீதியமைச்சர்
மத்திய வங்கி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள நீதியமைச்சர்
இலங்கை மத்திய வங்கி மீது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்திற்கு வீழ்ச்சியடைந்த விவகாரத்தில் மத்திய வங்கிக்கே அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் கடமைகளையும் பொறுப்புக்களையும் புறக்கணித்துள்ள பிரதான அரச நிறுவனமாக மத்திய வங்கியே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நெறிமுறையற்றது என்றும் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.