இலங்கை
யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!
யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!
யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாகும்.
நாடு முழுவதும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% ஆகும்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருக்கின்றது.
யானை மற்றும் மனித உயிர் இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் இடம்பெற்று வரும் இவ்வாறான செயல்களுக்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.