அரசியல்

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தீர்மானம்

Published

on

பசில் ராஜபக்ச நாடு திரும்பியதும் தீர்மானம்

வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொதுத்தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ நடைபெற்றால் இரண்டுக்கும் கட்சி தயாராகவே உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், இன்று இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன திகழ்வதாகவும், பசில் ராஜபக்சவின் திட்டங்களுடனேயே கட்சியின் வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவின் செயற்பாடு மற்றும் கட்சிக்கு இணையான ஒரு அரசியல் கட்சி தலைவர் இருப்பார் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version