இலங்கை

நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு

Published

on

நண்பருடன் சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு

ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில் ஏறி மாலையில் அதிலிருந்து கீழே இறங்கிய போது பள்ளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளமொன்றில் தவறி விழுந்த இளைஞர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version