அரசியல்
ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு
ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு
தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாகவும், ஆனால் அது வேறு வகையான உறவு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தம்மை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் ரணில் என்ற அடிப்படையில் தாம் அவருடன் பழகுவதாக பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் சேரும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது அரசியலுக்கும் அவர்களின் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.