இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Published

on

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் விளைவாக பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உள்ளூர் சந்தையில் இவ்வாறான தயாரிப்புகள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவது பாரிய சவாலாகியுள்ளதென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அழகுசாதனப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் மருந்து சட்டம் நீக்கப்பட்டுள்ளதுடன், விதிமுறைகள் இல்லாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சந்தைக்கு வரும் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, அத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முறையான ஏற்பாடுகள் இல்லாததால், விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அழகுசாதனைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக பக்கவிளைவுகளுடன் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, பெரும்பாலும் இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகள் தீங்கு விளைவிக்கும் வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களாகும்.

அவை எந்தவொரு சிறப்பு அதிகாரத்திலும் பதிவு செய்யப்படவில்லை மற்றும் பயனர்களுக்கு ஒவ்வாமை மற்றும் மரணம் கூட ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும். இதனால் அவற்றினை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version