இலங்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் தகவல்

Published

on

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் தகவல்

2018ஆம் ஆண்டில் 254,000 சிறு வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன் 2018ஆம் ஆண்டில் நாட்டில் இயங்கிய 263,000 குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் கோவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி 2018 ஆம் ஆண்டில், 254,000 சிறு வணிகங்கள் மற்றும் 1,800 நடுத்தர அளவிலான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் மூடப்பட்ட நிறுவனங்களில் 197,000 நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 56,600 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version