இலங்கை

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

Published

on

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது போராட்டத்துக்கு அடித்தார்கள், கண்ணீர் புகைக் குண்டுகளால் தாக்கியதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியினர்   ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் போது எழுந்து சென்றனர்.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு ஏற்பட்டமையை  அவர்களின் செயற்பாட்டில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

ஏனெனில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் சபையில் அமர்ந்துகொண்டே இருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டார்.

Exit mobile version