இலங்கை

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி முறைப்பாடு

Published

on

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம்: மனைவி முறைப்பாடு

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்காவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், சனத் நிஷாந்தவின் மனைவி அவரது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டு செய்துள்ளார்.

Exit mobile version