அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு

Published

on

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வித இணக்கப்பாடுகளையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஜனாதிபதி அதற்கான நேரத்தை ஒதுக்கித்தரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளக் கூடிய ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவினை வழங்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version