இலங்கை

இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானி

Published

on

இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானி

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி, நிகழ்நிலை காப்புச்சட்டமூலம், திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான அதிகாரம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version