இலங்கை

கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

Published

on

கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

கொழும்பில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய சுதந்திர விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இந்திக்க ஹப்புகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version