இலங்கை

தென்னிலங்கையில் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

Published

on

தென்னிலங்கையில் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிக்கு 43 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காரில் வந்த நால்வரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்காலையில் நேற்றையதினம் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version