இலங்கை

அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமார

Published

on

அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமார

தற்போது வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது, இதை மக்களால் தாங்க முடியாது என்பது உண்மைதான் அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போரு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யுத்த மோதல்கள் காரணமாக உலகின் பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.

தற்போது, ​​உலகின் பல நாடுகளில் யுத்த மோதல்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளிலும் இதுதான் நிலைமை. அடிக்கடி வெளிநாடு செல்லும் அனுரகுமாரக்கு இது தெரியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும்.

நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். எனவேதான் எதிர்க்கட்சிகள் மற்றும் சதிகாரர்களின் பொய்யான பேச்சுக்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு வழமைக்கு திரும்பும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version