இலங்கை

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு

Published

on

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் மறை 2.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 1.6 சதவீமாக பதிவாகியுள்ளது.

Exit mobile version