இலங்கை

விரைவில் விசேட வேலைத்திட்டம்: கல்வி அமைச்சர்

Published

on

விரைவில் விசேட வேலைத்திட்டம்: கல்வி அமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் அமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version