அரசியல்

இறுதிக்கட்டத்தில் முடிவை அறிவிப்பேன்! கருணா பகிரங்கம்

Published

on

இறுதிக்கட்டத்தில் முடிவை அறிவிப்பேன்! கருணா பகிரங்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று ஒற்றுமையின்மையின் விளைவாக பிளவடைந்து காணப்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”குறிப்பாக எங்கள் அரசியல் பாதையானது மகிந்த தரப்பினருடன் ஒன்றிணைந்து செல்லாது என்றும் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமையும்.

அதேவேளை மட்டக்களப்பின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசாமல் தமது சொந்த பிரச்சினைகளை பிள்ளையான் மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் எடுத்துரைக்கின்றனர் என்றும், இது சரியான அரசியல் பாதை இல்லை எனவும் கூறினார்.

Exit mobile version