இலங்கை

தொடரும் தனியார் வாகன இறக்குமதி தடை

Published

on

பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கை அரசாங்கம் தனியார் மோட்டார் வாகன இறக்குமதி தடையை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிய இயந்திர திறன் கொண்ட வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவியுள்ளன.

எனினும், இலங்கை அரசாங்கம் பொருளாதார விவேகத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ள நிலையில், நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அவசர முடிவுகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, நாட்டின் கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு, உறுதியான ஆரோக்கிய நிலையை அடையும் போது மட்டுமே வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version