இலங்கை

இலங்கையில் பதிவான கோவிட் மரணம்: மக்களுக்கு கோரிக்கை

Published

on

இலங்கையில் பதிவான கோவிட் மரணம்: மக்களுக்கு கோரிக்கை

சிரோசிஸால் (cirrhosis) பாதிக்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 65 வயதுடைய நபர் ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை உலப்பனையைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ, PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டடுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், இந்தியாவில் பரவும் புதிய வகை கோவிட் வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version