இலங்கை
பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!
பொதுத் தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிடுகிறதா..!
ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தி பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்களிடம் பிரச்சாரப் பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தொகுதி அமைப்பு பணிகளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.