இலங்கை

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

Published

on

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்யமுடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே இதனை கூறியுள்ளார்.

உலகளவில் சிறு பிரிவினராகயிருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யூதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிகழ்வில் அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு வர்த்தக பிரிவு வகுப்பறைனை திறந்துவைத்தார்.

மேலும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மக்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம என்பனவும் இடம்பெற்றது.

இதன்போது அன்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Exit mobile version