இலங்கை
மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை! புதிய அறிவித்தலை வெளியிட்ட மின்சார சபை
மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை! புதிய அறிவித்தலை வெளியிட்ட மின்சார சபை
நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம் இன்று இரவு 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் ஏற்பட்ட பரவலான மின்வெட்டு காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.