இலங்கை
மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!
மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக நகர்ப்புற பகுதிகளுக்கான நீர்விநியோகமும் தடைப்படலாம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் மின்சாரத் தடையால் வைத்தியசாலைகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டால், பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பிரதான மின் வளங்கள் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று மாலை 5 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் வழங்கியுள்ளது.
இதன் காரணமாக மின்விநியோக தடை நீடிக்குமேயானால் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் நீர்விநியோகமும் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.