இலங்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மூன்று மாவீரர்களின் தயார் ஒருவர் ஈகைச்சுடரை ஏற்றிவைத்துள்ளார்.