இலங்கை

யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

Published

on

யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் (17.09.2023) இடம்பெற்றுள்ளது.

கந்தசாமி தர்ஷன் (வயது 31) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version